Tuesday, June 2, 2009

என்ன கொடும சரவணா!!!

இன்னைக்கு ஒரு விசயத்த கேள்வி பட்டுட்டு சிரிக்கவா இல்ல அழவா ன்னு தெரியல. தட்ஸ் தமிழ் வெப் சைட்ல இந்த செய்தி



யாரு வேனாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி தொடங்கலாம் ன்னு நம்ம இந்திய ஜனநாயகம் அனுமதி கொடுத்திருக்கு;அந்த பாவத்துக்கு நிறைய தண்டனைய ஏற்கனவே விஜயகாந்த், சரத்குமார், த.ராஜேந்தர், கார்த்திக் மூலமா நம்ம தமிழ் நாடு அரசியல் சந்திச்சுருக்கு. இந்த வரிசைல இன்னொரு அரசியல் தற்குறி 'இளைய தளபதி' விஜய். இந்த சினிமா காரனுக பில்ட் அப் பண்ணி பண்ணியே பெரிய ஆளு அயிடுவானுக அதுக்கு விஜய் ஒரு நல்ல உதாரணம். சினிமா உலகத்துக்கு தன்னுடைய தந்தையாரால் அறிமுகபடுத்தபட்டு சில மூன்றாம் தர மட்டமான படங்கள் மூலமும், தெலுங்கு, ஹிந்தி, மலையாள மொழி மறுதயாரிப்பு படங்கள் மூலமும் தன்னை தானே பிரபலப்படுத்தி(?!?!) கொண்டவர் இவர். மாற்று மொழி மறுதயரிப்புகளில் நடிப்பதை தவிர ஒன்றும் தெரியாது என்று பல்வேறு தரப்பினரால் விமர்சனம் செய்யபடுபவர்.

தமிழ் நாட்டில் எல்லோரும் அரசியல் கட்சி அரம்பித்து விட்டால், பின்னர் யாரு தான் ஓட்டு போடுறது? ஏற்கனவே ஒரு நடிகர் தான் ஒரு நல்ல ஓட்டு பிரிப்ப்பாளர் என்ற பெருமையயை இந்த நாடாளுமன்ற தேர்தலில் நிலைநாட்டி விட்டார், அந்த பாணியில் இன்னொரு கொடுமை தமிழ் நாட்டை தாக்க ஆரம்பிக்க போகிறது.

இந்த அம்மா ஆட்சிக்கு வந்தா இந்த தமிழ் நாட்டை யாராலும் காபத முடியாது ன்னு வசனம் பேசிய நடிகர் கூட அரசியலுக்கு வரவா வேண்டாமா ன்னு முடிவு எடுக்க தெரியாம முழிக்குராறு! அனா வெறும் ஐம்பது படங்களில் நடித்து முடிச்ச உடனே அரசியலுக்கு வரான் அப்படின்னா அவனுக்கு அழிவு காலம் அரம்பிசுடிச்சு ன்னு சொல்றத விட வேற ஒன்னும் சொல்ல தோனல.

அரசியல்நா படத்துல பேசுற வசனம் மாதிரின்னு நினைசுட்டாரு, அதுக்கு நாட்டோட பொருளாதாரம், நிர்வாகம், அரசியல் தந்திரம், சமயோசித புத்தி, மக்களோட செல்வாக்கு, மக்களோட அன்றாட பிரச்சனைகள் பற்றிய அறிவு அப்படின்னு நிறைய திறமைகள் வேணும் பா... போயி புள்ள குட்டிகள படிக்க வைக்க பாருங்க.

ஏற்னகவே படத்துல நடிச்சு எங்கள கொல்ற, அரசியல் வேறையா? என்ன கொடுமை சரவணா? தாங்காதுடா.

No comments: